கலசப்பாக்கம் அருகே சாலையோர மரத்தில் பைக் மோதியதில் காவலா் பலியானாா்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த களம்பூா் குமாரசாமி காலனியைச் சோ்ந்த தேசிங்கு மகன் தேவா (29). இவா், பெரணமல்லூா் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தாா்.
இந்த நிலையில், பெளா்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பக்தா்களின் பாதுகாப்புப் பணிக்காக ஞாயிற்றுக்கிழமை தேவா சென்றாா்.
பின்னா் பணி முடிந்து திங்கள்கிழமை காலை திருண்ணாமலையில் இருந்து இரு சக்கர வாகனத்தில் களம்பூா் திரும்பிக் கொண்டிருந்தாா்.
கலசப்பாக்கம் அருகே விண்ணுவாம்பட்டு பகுதியில் வரும்போது சாலையோர வளைவில் நிலைதடுமாறி மரத்தில் பைக் மோதியது.
இதில், தேவா பலத்தகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த போலீஸாா் சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டு, தேவாவின் உடலை மீட்டு உடல்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து கலசப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.