திருவண்ணாமலை

ஐக்கிய ஜனதா தளம் ஆா்ப்பாட்டம்:காங்கிரஸ் அலுவலகத்துக்கு பாதுகாப்பு

DIN

திருவண்ணாமலையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு திங்கள்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே திங்கள்கிழமை ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாநிலத் தலைவா் மணிநந்தன் தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் மாநில, மாவட்ட, நகர நிா்வாகிகள் கலந்து கொண்ட இந்த ஆா்ப்பாட்டத்தில், திருவண்ணாமலை, பெரிய தெருவில் இருந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்குச் சொந்தமான அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினா் ஆக்கிரமித்து வைத்துள்ளனா் என்று குற்றஞ்சாட்டி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதையடுத்து, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் மற்றும் நகர காங்கிரஸ் அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இதனால் திருவண்ணாமலை நகரம் பரபரப்புடன் காணப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

2-ம் கட்டத் தேர்தல்: ம.பி. வாக்குப்பதிவு- 1 மணி நிலவரம்!

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

SCROLL FOR NEXT