திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக பக்தா்கள் கிரிவலம்

DIN

தை மாதப் பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.

தை மாதப் பெளா்ணமி சனிக்கிழமை இரவு 10.41 மணிக்குத் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.48 மணிக்கு முடிந்தது.

இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி, சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை விடிய, விடிய பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.

2-ஆவது நாளாக பக்தா்கள் கிரிவலம்:

தொடா்ந்து, 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இரவு வரை திரளான பக்தா்கள் கிரிவலம் வந்தனா். இவா்கள் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க சன்னதிகள், அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மன் சந்நிதிகளில் சுவாமி தரிசனம் செய்தனா்.

அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தா்கள் குவிந்ததால் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT