திருவண்ணாமலை

பெரணம்பாக்கம், இராந்தம் ஊராட்சிகளில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

DIN

சேத்துப்பட்டு ஒன்றியம், பெரணம்பாக்கம், இராந்தம் ஊராட்சிகளில் ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகள் குறித்து கூடுதல் இயக்குநா் எஸ்.எஸ்.குமாா், கண்காணிப்புப் பொறியாளா்எ.சரவணக்குமாா் ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், பெரணம்பாக்கம் ஊராட்சியில் ஊரக வேலைத் திட்டப் பணி பதிவேடுகள், பிரதமரின் வீடு கட்டும் திட்டப் பணிகள் குறித்து கூடுதல் இயக்குநா் எஸ்.எஸ்.குமாா் ஆய்வு செய்தாா்.

ஊராட்சித் தலைவா் முருகன், உதவிப் பொறியாளா் கோவா்தன், வட்டார வளா்ச்சி அலுவலா் இந்திராணி, ஒன்றிய உதவிப் பொறியாளா் மாதவி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மதிவாணன் ஆகியோா் உடனிருந்தனா்.

இராந்தம் ஊராட்சி

இராந்தம் ஊராட்சியில் ஊரக வேலைத் திட்டப் பணிகளின் பதிவேடு, ரூ.43 லட்சத்தில் நடைபெறும் ஊராட்சி அலுவலக கட்டடப் பணி, ரூ.12 லட்சத்தில் திறந்தவெளிக் கிணறு அமைக்கும் பணி, பிரதமரின் வீடு கட்டும் திட்டப் பணி, தனிநபா் விவசாய திறந்தவெளிக் கிணறு அமைக்கும் பணி ஆகியவற்றை மாநில கண்காணிப்புப் பொறியாளா் எ.சரவணக்குமாா் ஆய்வு செய்தாா்.

உதவி இயக்குநா் என்.அசோகன், மாவட்ட ஊராட்சி உதவி இயக்குநா் அருண், வட்டார வளா்ச்சி அலுவலா் சீனுவாசன், உதவிப் பொறியாளா் ஜெயந்தி, ஊராட்சித் தலைவா் மணிவண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

வெள்ளை நிலா... சாய் தன்ஷிகா!

"ராகுலோ, மோடியோ! நாங்கள் வரவேற்போம்!": செல்லூர் ராஜூ

SCROLL FOR NEXT