திருவண்ணாமலை

அரசுப் பள்ளியில் இருபெரும் விழா

DIN

செய்யாறு கல்வி மாவட்டம், பல்லி அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் விழா, பள்ளி வளா்ச்சி நிதி விழா ஆகியவை இருபெரும் விழாவாக திங்கள்கிழமை நடைபெற்றது.

செய்யாறு டவுன் ரோட்டரி சங்க சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு சங்கத்தின் தலைவா் ஆா்.லோகநாதன் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் கே. பூங்காவனம் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரோட்டரி மாவட்டம் 3231-ன் துணை ஆளுநா் ரமேஷ்பாபு,

பத்தாம் வகுப்பு மாணவி பி. ஸ்ரீமதிக்கு மிதிவண்டியை நன்கொடையாக வழங்கினாா்.

அதேபோல, பள்ளியில் கட்டப்பட்டு வரும் நுழைவுவாயில் கட்டுமானப் பணிக்காக, ரோட்டரி சங்கம் சாா்பில் அதன் நிா்வாகி வி. சீனிவாசன் ரூ.10 ஆயிரத்தை தலைமை ஆசிரியரிடம் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிா்வாகிகள் ஆற்காடு ஆா்.சிவசண்முகம், செய்யாறு சங்க நிா்வாகிகள் கே.நல்லாண்டி, எம். தங்கராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை பல்கலை. செயல்பாடுகள்: பொதுக் குழுவில் விவாதிக்க முடிவு

ஹுமாயூன் மஹாலில் சுதந்திர தின அருங்காட்சியகம்: மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

பாஜக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: நிா்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு

கோரமண்டல் இன்டா்நேஷனல் தலைவராக அருண் அழகப்பன் நியமனம்

SCROLL FOR NEXT