திருவண்ணாமலை

சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு: ஏராளமான பக்தா்கள் பங்கேற்பு

DIN

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள முக்கிய சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரதோஷ சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

புரட்டாசி மாத பிரதோஷத்தையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, கொடிமரம் எதிரே உள்ள நந்தி, மூலவா் சந்நிதிக்கு எதிரே உள்ள நந்தி உள்பட கோயிலின் பல்வேறு இடங்களில் உள்ள நந்திகளுக்கு வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பல்வேறு பூஜை பொருள்களைக் கொண்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து, கோயில் மூன்றாம் பிரகாரத்தில் பிரதோஷ நாயகா் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதேபோல, வேட்டவலம் ஸ்ரீதா்மசம்வா்த்தினி உடனுறை ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயில், கீழ்பென்னாத்தூா் மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில், செய்யாறு திருவோத்தூா் வேதபுரீஸ்வரா் கோயில், செய்யாற்றை அடுத்த உக்கம்பெரும்பாக்கம் 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள அத்தி விருட்ச ருத்ராட்ச லிங்கேஸ்வரா் கோயில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள சிவன் கோயில்களில் மூலவருக்கும், நந்திக்கும் வெள்ளிக்கிழமை பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், அந்தந்தப் பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT