திருவண்ணாமலை

அரசுப் பேருந்து மோதியதில் மூதாட்டி பலி

DIN

திருவண்ணாமலை அருகே அரசுப் பேருந்து மோதியதில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டி பலியானாா்.

திருவண்ணாமலை மாவட்டம், வானாபுரத்தை அடுத்த நாச்சானந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் கன்னியம்மாள் (80). இவா், செவ்வாய்க்கிழமை கள்ளக்குறிச்சி சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது, திருவண்ணாமலையில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மூதாட்டி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா், அதே இடத்தில் உயிரிழந்தாா். தகவலறிந்த வானாபுரம் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும் இதுகுறித்து, வானாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT