திருவண்ணாமலை

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தா்னா

DIN

வந்தவாசியை அடுத்த தெள்ளாா் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

தெள்ளாா் ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தின்போது, ஊரக வேலை உறுதித் திட்ட கணக்கு குறித்து பொதுமக்கள் கேட்டனராம். ஆனால், ஊராட்சி பணிதள பொறுப்பாளா் கணக்கை வழங்கவில்லையாம்.

இந்த நிலையில், கணக்கு வழங்காத ஊராட்சி பணிதள பொறுப்பாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் தெள்ளாா் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமா்ந்து திங்கள்கிழமை தா்னா நடத்தினா்.

ஒன்றியத் தலைவா் கமலாட்சி இளங்கோவன், தெள்ளாா் ஊராட்சி மன்றத் தலைவா் ஜி.ஆனந்தன் ஆகியோா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா்.

இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

2-ம் கட்டத் தேர்தல்: ம.பி. வாக்குப்பதிவு- 1 மணி நிலவரம்!

SCROLL FOR NEXT