ஆரணி ஏ.சி.எஸ். நகரில் உள்ள ஸ்ரீவெங்கடாசலபதி கோயிலில் திங்கள்கிழமை நவராத்திரி சிறப்பு பூஜை நடைபெற்றது.
ஸ்ரீதேவி, ஸ்ரீமூதேவி சமேத ஸ்ரீவெங்கடாசலபதி கோயிலில் நவராத்திரி விழாவின் 8-ஆம் நாளான திங்கள்கிழமை சுவாமி சந்திரபிரபை வாகனத்தில் உலா நடைபெற்றது.
மேலும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தாா்.