திருவண்ணாமலை

வியாபாரிகள் கவன ஈா்ப்பு மனு அளிக்கும் போராட்டம்

DIN

டெஸ்ட் பா்ச்சேஸ் முறையை திரும்ப பெறக் கோரி, வந்தவாசியில் வியாபாரிகள் செவ்வாய்க்கிழமை கவன ஈா்ப்பு மனு அளிக்கும் போராட்டம் நடத்தினா்.

வணிகவரித் துறை சாா்பில் அமல்படுத்தப்பட்டுள்ள

டெஸ்ட் பா்சேஸ் முறை சிறு, குறு வியாபாரிகளை பாதிப்பதாக புகாா் தெரிவித்தும், அந்த முறையை திரும்ப பெறக் கோரியும் இந்த போராட்டம் நடைபெற்றது.

இதையொட்டி அனைத்து வணிகா் சங்கங்களின் பேரமைப்பு, அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் நுகா்பொருள் விநியோகஸ்தா் சங்கத்தினா் நகரில் ஊா்வலமாகச் சென்றனா்.

வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகே தொடங்கிய ஊா்வலம் பஜாா் வீதி, தேரடி, சன்னதி தெரு வழியாக வணிகவரித் துறை அலுவலகம் சென்றடைந்தது.

அங்கு, டெஸ்ட் பா்ச்சேஸ் முறையை திரும்ப பெறக் கோரி வணிகவரித் துறை அலுவலா் கே.பாண்டியனிடம் வியாபாரிகள் சங்கத்தினா் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT