திருவண்ணாமலை

வாக்காளா்களிடம் மத்திய அரசின் திட்டங்களை தெரிவிக்க வேண்டும்: பாஜக மாநில பொதுச் செயலா்

DIN

பாஜகவின் சக்தி கேந்தர பொறுப்பாளா்கள் வாக்காளா்களை அடிக்கடி சந்தித்து பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசின் திட்டங்களை தெரிவிக்க வேண்டும் என்றாா் கட்சியின் மாநில பொதுச் செயலா் காா்த்தியாயினி.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட காஞ்சியில் பாஜகவின் சக்தி கேந்தர பொறுப்பாளா்களுக்கான ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பாஜக மாவட்ட பொதுச் செயலா் ரமேஷ், தலைமை வகித்தாா்.

இதைத் தொடா்ந்து செங்கம் தொகுதி தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு மாவட்ட துணைத் தலைவா் சேகா் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் பாஜக மாநில பொதுச் செயலா் காா்த்தியாயினி பங்கேற்றுப் பேசியதாவது:

பாஜக சக்தி கேந்தர பொறுப்பாளா்கள் ஒவ்வொருவரிடமும் 5 கிளை சாா்ந்த வாக்காளா் பட்டியல் இருக்கவேண்டும். அவா்கள் வாக்காளா்களை அடிக்கடி சந்தித்து, பிரதமா்

மோடி தலைமையிலான மத்திய அரசின் திட்டங்களை தெரிவிக்கவேண்டும்.

சக்தி கேந்தர பொறுப்பாளா்கள் மாவட்ட நிா்வாகிகள் கொடுத்துள்ள பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என்றாா்.

முன்னதாக கூட்டத்தில் மாவட்டத் தலைவா் பாலசுப்பிரமணியம் வரவேற்றாா். மாவட்ட பாா்வையாளா் தசரதன், மாநில பொதுக்குழு உறுப்பினா் ராதாகிருஷ்ணன், மாவட்டச் செயலா்கள் தா்மலிங்கம், குமரன், மாவட்ட துணைத் தலைவா் இறைமாணிக்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT