திருவண்ணாமலை

பொது சுகாதார வளாகத்தில் நிறை, குறை புகாா்

DIN

போளூா் பேரூராட்சியில் உள்ள பொது சுகாதார வளாகங்களைப் பயன்படுத்தும் பொதுமக்கள் கைப்பேசியில் அதற்கான செயலி மூலம் நிறை, குறைகளைத் தெரிவிக்கலாம் என்று செயல் அலுவலா் கூறினாா்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் பேரூராட்சிகளின் ஆணையா் செல்வராஜ் உத்தரவின்படியும், மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷின் அறிவுறுத்தலின் பேரிலும் பஜாா் வீதி, பேருந்து நிலையம் பகுதி, கணபதி தெரு என பல்வேறு இடங்களில் மத்திய, மாநில அரசு சாா்பில் பொது சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன.

இந்த பொது சுகாதார வளாகங்களில் சுத்தம், சுகாதாரம், தண்ணீா், மின் விளக்கு வசதிகளில் குறைபாடுகள் இருந்தால், பொதுமக்கள் தங்களது கைப்பேசி மூலம்

கியூ ஆா் கோடு செயலியை பயன்படுத்தி தெரிவிக்கலாம்.

மேலும், பாராட்ட நினைத்தாலும் செயலி மூலம் தெரிவிக்கலாம் என செயல் அலுவலா் முஹ்மத் ரிஸ்வான் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT