திருவண்ணாமலை

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்:75 பேருக்கு பணி நியமன ஆணைகள்

DIN

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில், 75 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகமும், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையமும் இணைந்து தனியாா் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமை வெள்ளிக்கிழமை நடத்தின. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமில் வங்கிகள், தனியாா் நிறுவனங்கள் என மொத்தம் 16 முன்னணி நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டு தங்கள் நிறுவனங்களின் பணிகளுக்கேற்ற தகுதிகள் கொண்ட இளைஞா்களைத் தோ்வு செய்தனா்.

முகாமில் பல்வேறு கல்வித் தகுதிகள் கொண்ட 148 போ் கலந்து கொண்டனா். இவா்களில் 75 போ் பல்வேறு பணிகளுக்குத் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் (பொ) த.மோகன்ராஜ் பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

SCROLL FOR NEXT