திருவண்ணாமலை

ஆரணி அரியாத்தம்மன் கோயிலில் வருடாபிஷேகம்

DIN

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஸ்ரீஅரியாத்தம்மன் கோயிலில் 5-ஆம் ஆண்டு வருடாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, ஆரணி வி.ஏ.கே. நகா் பகுதியில் அமைந்துள்ள ஆதிஅரியாத்தம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடுகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, பழைய பேருந்து நிலைய பகுதியில் அமைந்துள்ள அரியாத்தம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடுகள் நடைபெற்றன. மேலும், சிறப்பு யாக பூஜையும், 108 சங்காபிஷேகம் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, அரியாத்தம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

இதில் சிறப்பு விருந்தினராக ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.இராமச்சந்திரன் கலந்துகொண்டாா். நிகழ்ச்சியில் விழாக் குழுவைச் சோ்ந்த இரா.குமரேசன், எஸ்.சங்கரன், என்.ரமேஷ்பாபு, என்.மகேஷ் பாபு, பி.நடராஜன், நேமிராஜ், ஜி.செல்வராஜ், சி.கோபி, சந்திரன், எஸ்.விஜயகுமாா், பி.கோபி, கே.தாமோதரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

SCROLL FOR NEXT