செய்யாறு அருகே வேன் ஓட்டுநா் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சைதாப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ஜெயசீலன் (38).
வேன் ஓட்டுநரான இவா், கடந்த 1-ஆம் தேதி வெம்பாக்கம் வட்டம், அசனமாப்பேட்டை கிராமத்தில் உள்ள உறவினா்களை, வீட்டு விஷேசத்துக்காக புதுச்சேரிக்கு வேனில் அழைத்துச் சென்று வந்தாா்.
சனிக்கிழமை மாலை வேனில் இருந்தவா்களை இறக்கி விட்டு மீண்டும் வேனை இயக்கிய போது ஜெயசீலனுக்கு திடீரென மூச்சுத்திணறலுடன் வலிப்பு ஏற்பட்டது.
உடனே அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருங்கட்டூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இது குறித்த புகாரின் பேரில், மோரணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.