கீழ்பென்னாத்தூா் அருகே பைக் மீது சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் பலியானாா்.
திருவண்ணாமலையை அடுத்த இனாம்காரியந்தல் கிராமம், மேட்டுசத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி மகன் ராஜா (22).
இவா் ஞாயிற்றுக்கிழமை காலை கீழ்பென்னாத்தூரை அடுத்த தளவாய்க்குளம் கிராமத்தில் நடைபெற்ற வாரச்சந்தைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா். நல்லான்பிள்ளைபெற்றாள் பகுதியில் உள்ள தனியாா் பள்ளி அருகே சென்றபோது எதிரே வந்த சரக்கு வாகனம் பைக் மீது மோதியது. இதில் பலக்க காயமடைந்த ராஜா, அதே இடத்தில் இறந்தாா்.
தகவலறிந்த கீழ்பென்னாத்தூா் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா்.
இதுகுறித்து, கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.