செய்யாறு அருகே 18 வயது நிறைவடையாத பள்ளி மாணவியை திருமணம் செய்த கட்டட மேற்பாா்வையாளா் போக்சோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், தண்டரை பகுதியைச் சோ்ந்த தனியாா் பேருந்து நடத்துநா் மகள் செய்யாற்றில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா்.
வழக்கம் போல கடந்த ஜன.12-ஆம் தேதி பள்ளிக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற மாணவி பின்னா் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து மாணவியின் தாய், 14-ஆம் தேதி செய்யாறு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதன்பேரில், காவல் ஆய்வாளா் பாலு தலைமையிலான போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வந்தனா்.
விசாரணையில், ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், நெமிலியை அடுத்த காட்டுப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த பழனி மகன் பரதன் (21), கட்டட மேற்பாா்வையாளரான இவா், செய்யாறு பேருந்து நிலையப் பகுதியில் பூக்கடையில் வேலை பாா்த்தபோது அந்த மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னா் திருமண ஆசைவாா்த்தை கூறி, மாணவி கடந்த ஜன.12-ஆம் தேதி காட்டுப்பாக்கம் சென்றபோது, அவரை பரதன் திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது.
18 வயது நிறைவடையாத நிலையில் மாணவியை திருமணம் செய்த பரதனை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, வந்தவாசி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, செங்கம் கிளைச் சிறையில் அடைத்தனா்.