செய்யாற்றை அடுத்த உக்கம் பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கோ பூஜை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் தைப் பொங்கலை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து காணும் பொங்கலை முன்னிட்டு ஒரு பசுவுக்கு மட்டும் கோ பூஜை நடத்தப்பட்டது.
ஆண்டுதோறும் காணும் பொங்கலன்று 108 கோ பூஜை விழா நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கரோனா தொற்று காரணமாக ஒரு பசுவுக்கு மட்டும் கோ பூஜை நடத்தப்பட்டது.