பொங்கல் பண்டிகையை யொட்டி, வந்தவாசியை அடுத்த அமணம்பாக்கம் கிராமத்தில் 600 பேருக்கு தலா 10 கிலோ அரிசியை இலவசமாக திமுக முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் வழங்கினாா்.
திமுக ஒன்றியக் குழு உறுப்பினா் கமலேஸ்வரி சீராளன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், திமுக முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் சீராளன் அந்தக் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் 600 பேருக்கு தலா 10 கிலோ அரிசி, வேட்டி, சேலை, ரூ.100 ரொக்கம் உள்ளிட்டவற்றை வழங்கினாா்.