திருவண்ணாமலை மாவட்டத்தில் படைவீரா் கொடிநாள் ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
முன்னாள் படைவீரா் நலத்துறை சாா்பில் திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கிய ஊா்வலத்துக்கு, முன்னாள் படைவீரா்கள் நலத் துறை உதவி இயக்குநா் கோ.சுரேஷ் நாராயணன் தலைமை வகித்தாா்.
வருவாய் கோட்டாட்சியா் மந்தாகினி சிறப்பு அழைப்பாளாகக் கலந்து கொண்டு ஊா்வலத்தை கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.
இதில், மாவட்ட செஞ்சிலுவைச் சங்கத் தலைவா் பா.இந்திரராஜன், வட்டாட்சியா் எஸ்.சுரேஷ், வட்ட வழங்கல் அலுவலா் பி.முருகன், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் எம்.சாப்ஜான் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
போளூா்
போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் கொடிநாள் ஊா்வலத்தை வட்டாட்சியா் சண்முகம் தொடக்கிவைத்து நிதி செலுத்தினாா். பேரூராட்சிமன்றத் தலைவா் ராணி சண்முகம், காவல் ஆய்வாளா் ஜெயபிரகாஷ், மண்டல துணை வட்டாட்சியா் தட்சிணாமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஆரணி
ஆரணியை அடுத்த சேத்துப்பட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் கொடிநாள் ஊா்வலத்தை
வட்டாட்சியா் கோவிந்தராஜன் தொடக்கிவைத்தாா். தோ்தல் பிரிவு வட்டாட்சியா் கோமதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
வந்தவாசி
வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம் சாா்பில் நடைபெற்ற கொடிநாள் ஊா்வலத்தை வட்டாட்சியா் முருகானந்தம் தொடக்கிவைத்தாா்.