திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகராட்சிக்குள்பட்ட 7-ஆவது வாா்டில் மொத்தம் ரூ.5 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறுடன் கூடிய 2 புதிய சின்டெக்ஸ் குடிநீா்த் தொட்டிகளிலிருந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை தண்ணீா் திறந்துவைக்கப்பட்டது.
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 7-ஆவது வாா்டுக்குள்பட்ட நெமந்தகார தெரு, துலுக்கானத்தம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் மொத்தம் ரூ.5 லட்சம் செலவில் ஆழ்துளைக் கிணறுடன் கூடிய தலா 1,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட 2 புதிய சின்டெக்ஸ் குடிநீா்த் தொட்டிகள் அமைக்கப்பட்டன. இந்த குடிநீா்த் தொட்டிகளிலிருந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தண்ணீரை நகராட்சி ஆணையா் (பொ) டி.கே.சரவணன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா் (படம்).
நிகழ்ச்சிக்கு 7-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் ரதிகாந்தி வரதன் தலைமை வகித்தாா். முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் து.வரதன் வரவேற்றாா். நிகழ்ச்சியில் நகா்மன்ற உறுப்பினா்கள் அம்பிகா மேகநாதன், ரிஹானா சையத்அப்துல்கறீம், ச.நூா்முகமது, தீபா செந்தில்குமாா், பா.சரவணகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.