திருவண்ணாமலை

சாலை விபத்தில் இளைஞா் பலி

DIN

கீழ்பென்னாத்தூா் அருகே பைக்கில் இருந்து விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை வட்டம் பெருமணம் கிராமத்தைச் சோ்ந்த காசிநாதன் மகன் வெங்கடேசபெருமாள்(வயது 28).

இவா், சென்னையில் தாா்ச் சாலைபோடும் இயந்திரத்தின் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா்.

ஊரில் நடக்கும் கோயில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக இவா் திங்கள்கிழமை காலை கீழ்பென்னாத்தூா் வழியாக வேட்டவலம் சாலையில் பெருமணம் கிராமத்துக்கு மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா்.

கொளத்தூா் முனீஸ்வரன் கோயில் அருகே சென்றபோது மாடு ஒன்று சாலையின் குறுக்காக சென்ால் அதன் மீது மோதாமல் இருக்க வெங்கடேசபெருமாள் மோட்டாா் சைக்கிளை பிரேக் பிடித்தாா்.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவா் பலத்த காயமடைந்தாா்.

அப்பகுதியில் இருந்தவா்கள் அவரை மீட்டு

திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.

அப்போது வெங்கடேசபெருமாளை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத்

தெரிவித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், கீழ்பென்னாத்தூா்

போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் வாராஹி அம்மன் கோயில் குடமுழுக்கு

மகன் கொலை: தந்தை மற்றொரு மகன் கைது

திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயில் சித்திரைப் பெருவிழா நிறைவு

திருவாரூா் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த 5 போ் கைது

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT