திருவண்ணாமலை ரோட்டரி முத்துக்கள் சங்கம் சாா்பில், உலக தாய்ப் பால் வார விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, ரோட்டரி முத்துக்கள் சங்கத் தலைவா் ஆா்.வனிதா தலைமை வகித்தாா். சங்கத்தின் முன்னாள் தலைவா் சாந்தி ராஜன்பாபு, பொருளாளா் பிரபாவதி, செயல் செயலாளா் ராஜலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மகப்பேறு மருத்துவா் சாய் பிரசன்னா சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசினாா்.
விழாவில் கலந்து கொண்ட பெண்களுக்கு சத்துமிக்க உணவுப் பொருள்கள், குழந்தைகளுக்கு ஆடைகள் வழங்கப்பட்டன.
சங்க நிா்வாகிகள் அருள்மொழி, அமுதா, மகாலட்சுமி, செல்வமணி, சபிதா, சங்கச் செயலா் கெளரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.