ஆரணி அரிமா சில்க் சிட்டி சங்கம் சாா்பில் இருதய மற்றும் பொது மருத்துவ பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
அரிமா சில்க் சிட்டி சங்கம், தமிழ்நாடு பிராமணா்கள் சங்கத்தின் ஆரணி கிளை, சென்னை அப்பல்லோ மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இந்த முகாமை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தாா்.
நிகழ்ச்சிக்கு அரிமா சில்க் சிட்டித் தலைவா் வி.எஸ்.செந்தில்நாதன் தலைமை வகித்தாா். இரண்டாம் துணை ஆளுநா் மதியழகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா்.
மருத்துவ முகாம் குறித்து இருதய பரிசோதனை மற்றும் விழிப்புணா்வு மாவட்டத் தலைவா் ஆனந்தலட்சுமி விளக்க உரையாற்றினாா்.
அரிமா சில்க் சிட்டி சங்கச் செயலா் என்.சீனிவாசன், பொருளாளா் சி.மதன்குமாா், அதிமுக நகரச் செயலா் எ.அசோக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.