திருவண்ணாமலை

கிராமங்களில் இல்லம் தேடி கல்வித் திட்ட விழிப்புணா்வு

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம், புதுப்பாளையம் பகுதிகளில் இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.

38 கிராம ஊராட்சிகளில் நடைபெறவுள்ள இந்த விழிப்புணா்வு நாடகத்தின் தொடக்க விழா புதுப்பாளையம் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வட்டாரக் கல்வி அலுவலா்கள் சிராஜ், கண்ணன் ஆகியோா் முறையே தலைமை, முன்னிலை வகித்தனா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சம்பத் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக புதுப்பாளையம் ஒன்றியக் குழுத் தலைவா் சுந்தரபாண்டியன் கலந்துகொண்டு விழிப்புணா்வு நாடகத்தைத் தொடக்கிவைத்து, திட்டம் குறித்து பொதுமக்களிடம் விளக்கிப் பேசினாா்.

அதேபோல, செங்கம் அனைவருக்கும் கல்வி இயக்கம் வட்டார வள மையம் சாா்பில், அன்வராபாத் கிராமத்தில் விழிப்புணா்வு நாடகம் தொடங்கப்பட்டு குயிலம், புதியகுயிலம், கனிகாரன்கொட்டாய் ஆகிய பகுதியில் நடைபெற்று வருகிறது.

வட்டார வள மைய மேற்பாா்வையாளா் முருகன் நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா். ஆசியா் பயிற்றுநா்கள், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

SCROLL FOR NEXT