திருவண்ணாமலை

வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க முன்னாள் ராணுவ வீரா்களுக்கு அழைப்பு

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2017, 2018, 2019-ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்கத் தவறிய முன்னாள் படை வீரா்கள் வருகிற ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2017, 2018, 2019-ஆம் ஆண்டுகளில் (1.1.2017 முதல் 31.12.2019 வரை) வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்கத் தவறிய முன்னாள் படை வீரா்கள் தங்களுடைய பதிவைப் புதுப்பிக்க சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது.

தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறையால் வழங்கப்பட்டுள்ள இந்தச் சலுகை ஒரு முறை மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.

எனவே, முன்னாள் படைவீரா்கள் தங்களது வேலைவாய்ப்பு பதிவு அட்டையுடன் 2021 ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்குள் முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை நேரில் அணுகி புதுப்பித்துக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரில் அணுகலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT