திருவண்ணாமலை

மான், முயல்கள் வேட்டை: இளைஞா் கைது

DIN

திருவண்ணாமலை அருகே மான், முயல்களை வேட்டையாடிய இளைஞரை வனத்துறையினா் கைது செய்தனா்.

திருவண்ணாமலை வனவா் கனகராஜ் தலைமையில் வனவா் முனுசாமி, வனக் காப்பாளா்கள் அரவிந்த், கணபதி மற்றும் வனத்துறையினா் திங்கள்கிழமை அதிகாலை திருவண்ணாமலையை அடுத்த சொரகொளத்தூா், கொண்டம், பாடகம் காப்புக் காடுகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, பாடகம் காப்புக் காட்டில் பெண் புள்ளிமான், 2 முயல்களை வேட்டையாடி விற்பனைக்கு எடுத்துச் சென்ற இளைஞரைப் பிடித்தனா்.

விசாரணையில் அவா் செங்கம், நரிக்குறவா் காலனியைச் சோ்ந்த சஞ்சய் (20) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது மான், முயல்கள், வெடிமருந்து ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT