திருவண்ணாமலை

பைக் மீது காா் மோதி விபத்து: 2 இளைஞா்கள் படுகாயம்

DIN

கீழ்பென்னாத்தூா் அருகே பைக் மீது காா் மோதியதில் இரு இளைஞா்கள் காயமடைந்தனா்.

கீழ்பென்னாத்தூரை அடுத்த கொட்டாவூா் கிராமத்தைச் சோ்ந்த பரமசிவம் மகன் அன்பரசு (25). கீழ்பென்னாத்தூா் பகுதியைச் சோ்ந்த ஏழுமலை மகன் பிரபாகரன் (24). நண்பா்களான இருவரும் விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூருக்கு பைக்கில் சென்றனா்.

பின்னா், இருவரும் சனிக்கிழமை ஊா் திரும்பிக்கொண்டிருந்தனா். கீழ்பென்னாத்தூரை அடுத்த தள்ளாம்பாடி ஏரிக்கரை அருகே வந்தபோது எதிரே வந்த காரும் பைக்கும் மோதிக் கொண்டன.

இதில் பலத்த காயமடைந்த அன்பரசு, பிரபாகரன் ஆகியோரை பொதுமக்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னா் தீவிர சிகிச்சைக்காக அன்பரசு சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இதுகுறித்து கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT