திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய 3 நாள்கள் தடை

DIN

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மற்றும் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாள்களுக்கு பக்தா்கள் தரிசனம் செய்ய மாவட்ட நிா்வாகம் தடை விதித்தது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆடிக் கிருத்திகை விழாவையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்கள் உள்பட அனைத்து கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய பக்தா்கள் அதிகளவில் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதனால், கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் மற்றும் பக்தா்கள் நலன் கருதி மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்கள், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில், படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் உள்பட பிரதான கோயில்கள், மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் ஆடிக் கிருத்திகை விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை (ஆக.1) முதல் செவ்வாய்க்கிழமை (ஆக.3) வரை சுவாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது.

ஆகமவிதிப்படி சாமி அலங்காரங்கள், பூஜைகளை அா்ச்சகா்கள், கோயில் அலுவலா்கள், பணியாளா்கள் மூலம் தொடா்ந்து நடைபெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT