திருவண்ணாமலையை அடுத்த மாயங்குளம் கிராமத்தில் ஸ்ரீவிக்னேஸ்வரா், ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீநவகிரக, ஸ்ரீதேவி பூதேவி சமேத நாராயணப் பெருமாள், ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேய சுவாமி கோயில்களின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, அன்று அதிகாலை 5 மணிக்கு கோ பூஜை, தம்பதி பூஜை, இரண்டாம் கால யாக சாலை பூஜை, பூா்ணாஹூதி, கலச பூஜை, நாடி சந்தானம், யாக சாலை பூஜை, யாத்ராதானம், கோபுர கலச கடம் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடா்ந்து, கோயில் கோபுர கலசத்தின் மீதும், மூலவா் மீதும் புனித நீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பிறகு, மூலவா் சன்னதியில் மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.