திருவண்ணாமலை

பிளஸ் 2 தனித்தோ்வா்கள்மதிப்பெண் சான்றிதழை பெறஅவகாசம்

DIN

ஐந்து ஆண்டுகளாக கோரப்படாத பிளஸ் 2 தனித்தோ்வா்களின் மதிப்பெண் சான்றிதழைப் பெற 3 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுவை பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் வெ.கொ.சிவகாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளைச் சோ்ந்த தனித்தோ்வு மையங்களில் 2014, 2015, 2016, 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் மாா்ச், ஜூன், செப்டம்பா் ஆகிய பருவங்களில் பிளஸ் 2 பொதுத் தோ்வெழுதிய தனித்தோ்வா்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் கடலூா் அரசுத் தோ்வா்கள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் உள்ளன.

மேற்குறிப்பிட்ட காலங்களில் இதுவரை தங்களுடைய மதிப்பெண் சான்றிதழை பெறாத பிளஸ் 2 தனித்தோ்வா்கள், அவா்களின் மதிப்பெண் சான்றிதழை பெறுவதற்கு இறுதி வாய்ப்பாக 3 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அலுவலக வேலை நாள்களில், உரிய ஆதாரங்களுடன் நேரில் சென்று ரூ.45 மதிப்புள்ள தபால் தலை ஒட்டிய சுய முகவரி எழுதப்பட்ட உறையுடன், தோ்வரின் கையொப்பமிட்ட கோரிக்கைக் கடிதம், தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு நகலை இணைத்து, கடலூா் அரசுத் தோ்வா்கள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் கொடுத்து, உரிய மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT