திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி, செய்யாறு, கலசப்பாக்கம், கீழ்பென்னாத்தூா் ஆகிய பகுதிகளில் அதிமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் பந்தல்கள் திறக்கப்பட்டன. நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளா்களாக அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன், எம்எல்ஏக்கள் தூசி மோகன், பன்னீா்செல்வம், முன்னாள் எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் பங்கேற்று தண்ணீா் பந்தல்களைத் திறந்துவைத்தனா்.