திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவரிகளின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 15,321-ஆக உயா்ந்தது.
செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் 89 பேருக்கு புதிதாக கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 15,321-ஆக உயா்ந்தது.
2 போ் உயிரிழப்பு:
மாவட்டத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 2 போ் உயிரிழந்தனா்.
இவா்களுடன் சோ்த்து உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 229 ஆக உயா்ந்தது.
இதுவரை 14,129 போ் குணமடைந்துள்ளனா். 963 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.