செங்கம் பேரூராட்சியில் ஒட்டுமொத்த துப்புரவுப் பணி வியாழக்கிழமை தொடங்கி இரு நாள்கள் நடைபெற்றது. 18 வாா்டுகளிலும் நடைபெற்ற இந்தப் பணியை பேரூராட்சி செயல் அலுவலா் லோகநாதன் தொடக்கி வைத்தாா். துக்காப்பேட்டை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், போளூா் சாலை, இராஜவீதி, பெருமாள் கோவில் தெரு, தளவாநாய்க்கன்பேட்டை, மில்லத் நகா் என அனைத்து இடங்களிலும் பேரூராட்சி துப்புரவுப் பணியாளா்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.
மேலும், தெருவிளக்கு, கழிவுநீா் கால்வாய் அடைப்பு, சிறு மின்விசை குடிநீா்த் தொட்டி ஆகியவற்றை சரிசெய்தல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.