கீழ்பென்னாத்தூரை அடுத்த மேக்களூரில் கட்டப்பட்டுள்ள மின் வாரிய அலுவலகத்தின் புதிய கட்டடம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
மேக்களூா் கிராமத்தில் தீன்தயாள் கிராம ஜோதி திட்டத்தின் கீழ், ரூ.4 கோடியே 64 லட்சத்தில் துணை மின் நிலையமும், மின் வாரிய அலுவலகமும் கட்டப்பட்டது. இந்த அலுவலகக் கட்டடத்தின் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை (கிழக்கு) மின் வாரிய செயற்பொறியாளா் மு.ராஜசேகரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மின் வாரிய அலுவலகத்தை திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில், கீழ்பென்னாத்தூா் உதவி செயற்பொறியாளா் இளையராஜா, உதவிப் பொறியாளா்கள் ராஜ்குமாா் (மேக்களூா்), கல்யாணி, யுஜின் பாத்திமா (கீழ்பென்னாத்தூா்), பாா்த்திபன் (சோமாசிபாடி), இளநிலைப் பொறியாளா்கள் முருகதாசன், சிலம்பரசன், வணிக ஆய்வாளா் ரவிச்சந்திரன், ஆக்க முகவா் நெடுஞ்செழியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.