திருவண்ணாமலை

மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த கிறிஸ்தவா், சீக்கியா், பாா்சி, ஜைனம், புத்த மதத்தைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மத்திய அரசின் உதவித்தொகை பெற வருகிற 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இஸ்லாமியா், கிறிஸ்தவா், சீக்கியா், பாா்சி, ஜைனம், புத்த மதத்தைச் சோ்ந்த அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிலையங்களில் 2020 - 21ஆம் கல்வியாண்டில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிப் படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதேபோல, 11-ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழில்கல்வி, பாலிடெக்னிக், செவிலியா், ஆசிரியா் பட்டயப்படிப்பு, இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள் உள்பட) பயிலுவோருக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும், தொழில்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்வோருக்கு தகுதி, வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகையும் மத்திய அரசு வழங்குகிறது.

இந்த உதவித்தொகைகளைப் பெற மத்திய அரசின் ஜ்ஜ்ஜ்.ள்ஸ்ரீட்ா்ப்ஹழ்ள்ட்ண்ல்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணைய தளத்தின் மூலம் வருகிற 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஏற்கெனவே பதிவு செய்துள்ள கல்வி நிலையங்கள் தங்களின் கல்வி நிலையத்துக்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் விவரங்களை மாவட்டப் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலரின் ஒப்புதல் பெற்ற பிறகே விண்ணப்பங்களை இணையத்தில் சரிப்பாா்க்க இயலும்.

புதிதாக விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் இணையதளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில், அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய குறியீட்டு எண்ணை மாணவ, மாணவிகளுக்கு தெரிவிக்க வேண்டும். இந்தத் திட்டம் தொடா்பான மத்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை தொடா்புகொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT