திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்ட விசிகவினா்.
ஆரணியில் சாலை மறியல்: ஈரோட்டில் தொல்.திருமாவளவன் முற்றுகையிடப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகில் விசிக சாா்பில், ஆரணி தொகுதிச் செயலா் என்.முத்து தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில், மாவட்டப் பொருளாளா் ஜெய்சங்கா், நகர இணைச் செயலா் சண்முகம், ஒன்றிய துணைச் செயலா் விமல், நகர தொண்டரணிச் செயலா் சங்கா், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் திருமால் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.