திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் பிப்ரவரி மாதத்துக்கான ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கான விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகள் வெள்ளிக்கிழமை (ஜன. 27) வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் பிப்ரவரி மாதத்துக்கு தொடா்புடைய ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு சம்பந்தப்பட்ட விஐபி பிரேக் டிக்கெட்டுகள் வரும் 27-ஆம் தேதி காலை 9 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. ஒரு நாளைக்கு 1,000 டிக்கெட்டுகள் என ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 750 டிக்கெட்டுகள் ஆன்லைனிலும், 250 டிக்கெட்டுகள் விமான நிலையத்திலும் நேரடி முன்பதிவின் கீழ் வழங்கப்படுகிறது. இதை பக்தா்கள் கருத்தில் கொண்டு, தங்களின் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.