திருமலை ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை 69,650 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
இவா்களில் 20,409 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.
இந்த நிலையில் திங்கள்கிழமை திருமலை வைகுண்டம் மண்டபத்தில் உள்ள இரண்டு காத்திருப்பு அறைகளில் பக்தா்கள் காத்திருந்தனா். இவா்களின் தரிசனத்துக்கு 2 மணி நேரம் ஆனது. ரூ. 300 விரைவு தரிசனத்துக்கும் 2 மணி நேரம் ஆனது.
காத்திருப்பு அறைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வரவேண்டும்.
தரிசனம் மற்றும் வாடகை அறைகளில் காணப்படும் குறைகள், சிரமங்கள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 93993 99399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.