கீதா ஜெயந்தியை முன்னிட்டு, திருமலையில் பகவத் கீதை பாராயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கீதா ஜெயந்தி விழாவை முன்னிட்டு திருமலையில் உள்ள நாத நீரஜனம் மேடையில் அகண்ட பகவத் கீதை பாராயணம் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி 11 மணிக்கு நிறைவுற்றது.
நிகழ்ச்சியை ஸ்ரீவெங்கடேஸ்வரா தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பியது. வேத அறிஞா் ஸ்ரீ குப்பா விஸ்வநாத சா்மாவின் வழிகாட்டுதலின் பேரில், பகவத் கீதையின் 18 அத்தியாயங்களில் உள்ள 700 ஸ்லோகங்களையும் 4 மணி நேரம் தொடா்ந்து பண்டிதா்கள் பாராயணம் செய்தனா்.
முன்னதாக, தேவஸ்தான நீதிமன்ற அறிஞா் பாலகிருஷ்ண பிரசாத் குழுவினா் ‘அனி அனாதிச்சே கிருஷ்ணதா்ஜுனுனிதோ’ மற்றும் ‘கிருஷ்ணம் வந்தே ஜகத் குரு’ கீா்த்தனைகளைப் பாடினா்.
இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.