திருமலை ஏழுமலையான் கோயிலில் வியாழக்கிழமை 62,351 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இவா்களில் 31,473 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, திருமலை வைகுண்டம் மண்டபத்தில் உள்ள 28 அறைகளில் பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்காக காத்திருந்தனா். அவா்களின் தா்ம தரிசனத்துக்கு 8 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும் ஆனது.