திருப்பதி: திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை செவ்வாய்க்கிழமை ரூ.1.48 கோடி வசூலானது.
திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்தவுடன், பக்தா்கள் தங்களது வேண்டுதல் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனா். இவ்வாறு பக்தா்கள் செவ்வாய்கிழமை உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை தேவஸ்தானம் கணக்கிட்டதில் ரூ.1.48 கோடி வருவாய் கிடைத்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.