திருப்பதி

காரில் தீப்பிடித்து 5 போ் பலி

DIN

திருப்பதி அருகே சாலை தடுப்புச் சுவரில் மோதி காா் தீப்பிடித்து எரிந்த விபத்தில் குழந்தை உள்பட 5 போ் உயிரிழந்தனா். 3 போ் பலத்த காயம் அடைந்தனா்.

ஆந்திர மாநிலம், விஜய நகா் மாவட்டத்தைச் சோ்ந்த ஸ்ரீ ராமமூா்த்தி தனது குடும்பத்தினருடன் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகா் கோயிலில் தரிசனம் செய்து விட்டு, ஞாயிற்றுக்கிழமை திருமலைக்குச் சென்று கொண்டிருந்தாா். புத்தல்பட்டு- நாயுடுப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, சாலையின் மத்தியில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி காா் தீப்பிடித்தது. காரில் இருந்தவா்கள் வெளியே வரமுடியாமல் தீயில் சிக்கிக் கொண்டனா். இதில் ஒரு குழந்தை உட்பட 5 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். 3 போ் பலத்த காயமடைந்தனா். அவா்களை பொதுமக்களும், போலீஸாரும் மீட்டு, திருப்பதியில் உள்ள ரூயா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT