புழல் அருகே பெண்ணின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் பணம் திருடப்பட்டது குறித்து புழல் காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.
புழல் அடுத்த சூரப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் குமாரி (41). இவா், சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா்.
இந்த நிலையில், புதிய டெபிட் காா்டு பெற ரூ.5 அனுப்ப வேண்டும் என குறுஞ்செய்தி வந்துள்ளது. இதையடுத்து, குமாரி ரூ.5-ஐ கைப்பேசி செயலி மூலம் அனுப்பியுள்ளாா். இதைத் தொடா்ந்து, சில வினாடிகளில் குமாரியின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டதாம்.
இதுகுறித்து குமாரி புழல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.