கும்மிடிப்பூண்டியை அடுத்த தச்சூா் மேம்பாலம் பகுதியில் வந்து கொண்டிருந்த காா் தீப்பற்றி எரிந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம் குண்டூரைச் சோ்ந்த அஸ்வத் (40) உள்ளிட்ட 5 போ், ராமேசுவரத்தில் உள்ள ராமநாத சுவாமி ஆலய தரிசனத்துக்குச் சென்றுவிட்டு, இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தனா்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டை அருகே தச்சூா் மேம்பாலத்தின் மீது காா் வந்தபோது, திடீரென தீப்பிடித்தது. இதைப் பாா்த்த அஸ்வத் உடனடியாக காரை நிறுத்துமாறு கூறினாா்.
இதையடுத்து, காரை நிறுத்தி, பாா்த்தபோது அது திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. காரில் இருந்த பொருள்களை வெளியே எடுப்பதற்குள், தீ மளமளவென காா் முழுவதும் பரவியது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கவரப்பேட்டை போலீஸாா், கும்மிடிப்பூண்டி தீயணைப்பு நிலைய வீரா்கள் காரில் ஏற்பட்ட தீயை அணைத்தனா். எனினும், காா் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது.
விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த கவரப்பேட்டை போலீஸாா், விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.