திருவள்ளூர்

வடமாநிலத்தவர் தாக்கியதில் 4 பேர் காயம்

DIN

பூந்தமல்லியில் கனரக வாகனம் பழுது பார்க்கும் வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கியதில் 4 பேர் காயமடைந்தனர்.
 சென்னையை அடுத்த பூந்தமல்லியைச் சேர்ந்தவர் ராஜா(43). இவர், பூந்தமல்லி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனம் பழுது பார்க்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இங்கு, வட மாநிலத் தொழிலாளர்கள் சிலர் வேலை பார்க்கின்றனர். இந்த நிலையில், சென்னீர்குப்பத்தைச் சேர்ந்த ஜெகன் என்பவரது ஆதரவாளர்களும், ராஜா தரப்பினரும் சென்னீர்குப்பம் அரசு மதுப்பானக் கூடத்தில் மது அருந்திய போது தகராறு ஏற்பட்டுள்ளது.
 இதையடுத்து, திங்கள்கிழமை ராஜாவின் பழுதுபார்க்கும் நிறுவனத்திற்கு வந்த ஜெகன் ஆதரவாளர்கள் நியாயம் கேட்டுள்ளனர். இதில், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில் வட மாநிலத் தொழிலாளர்கள் கடையில் இருந்த இரும்பு கம்பி, உருட்டுக் கட்டைகளைக் கொண்டு தாக்கியதில் 4 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
 தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT