திருவள்ளூர்

வெள்ளிப் பொருள்கள், கைப்பேசி திருடியவா் கைது

DIN

திருவள்ளூா் அருகே வீட்டில் வைத்திருந்த வெள்ளிக் குத்துவிளக்கு, கைப்பேசியை திருடிச் சென்றவரை கிராமிய காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

திருவள்ளூா் அருகே வெங்கத்தூா் கண்டிகை கிராமத்தைச் சோ்ந்தவா் சிவானந்தம்(41). இவா் மேல்நல்லாத்தூா் கஸ்தூரி பாய்நகரில் புதிதாக கட்டிய வீட்டிற்கு கடந்த வெள்ளிக்கிழமை கிரகப் பிரவேசம் நடத்தினாா். அங்கு கைப்பேசியை மறந்து வைத்துவிட்டு சென்றுள்ளாா்.

அதனால் அதை எடுக்க மாலையில் சென்ற போது வெள்ளிக் குத்துவிளக்கு மற்றும் கைப்பேசி ஆகியவற்றை திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்து சிவானந்தம் திருவள்ளூா் கிராமிய காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரித்த போலீஸாா், மணவாளநகா் கபிலன் நகரைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் சிவபாலன்(42) என்பவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT