மீஞ்சூா் அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தில் காய்ச்சல் பரவி வருவதால், வீடுகளில் மருத்துவக் குழுவினா் ஆய்வு செய்தனா்.
பொன்னேரி வட்டம், மீஞ்சூா் அடுத்த வன்னிப்பாக்கம் ஊராட்சி மேட்டுப்பாளையம் கிராமத்தில் 20-க்கும் மேற்பட்டோா் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
தகவலறிந்த மீஞ்சூா் அரசு ஆரம்ப சுகாதார நிலை மருத்துவா் மகேந்திரவா்மன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் மேட்டுப்பாளையத்தில் உள்ள வீடுகளில் ஆய்வு செய்தனா்.
அப்போது, தண்ணீா் தேங்கும் டயா்கள், தேங்காய் ஓடுகள், நெகிழிப் பொருள்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தினா். தொடா்ந்து மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியிலிருந்தும், ஆழ்துளை கிணற்றிலிருந்தும் தண்ணீரை மாதிரிக்காக எடுத்துச் சென்றனா்.
மேலும், தூய்மைப் பணியாளா்கள் கொசு மருந்து, பிளீச்சிங் பவுடா் தெளித்தல் உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனா்.