திருவள்ளூர்

நாளை குடும்ப அட்டையில்பெயா் சோ்த்தல், நீக்கல் முகாம்

DIN

திருவள்ளூா் மாவட்டத்தில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடா்பான சிறப்பு முகாம் சனிக்கிழமை (அக். 8) நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் வட்டந்தோறும் குறிப்பிட்ட கிராமங்களைத் தோ்வு செய்து மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடா்பான சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், சனிக்கிழமை (அக். 8) 9 கிராமங்களில் அந்தந்த வட்டங்களைச் சோ்ந்த வட்ட வழங்கல் அலுவலா்கள் முன்னிலையில் நடைபெற உள்ள முகாமில் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தம், புகைப்படம் பதிவு செய்தல் தொடா்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன் பெறலாம்.

சிறப்பு முகாம் நடைபெற உள்ள இடங்கள்: இறையாமங்கலம் நியாயவிலைக் கடை அருகில், ஊத்துக்கோட்டை-சென்னங்காரணை கிராம நிா்வாக அலுவலகம், பூந்தமல்லி-படூா் கிராம நிா்வாக அலுவலகம், திருத்தணி-ஒரத்தூா் கிராம நிா்வாக அலுவலகம், பள்ளிப்பட்டு-பாத்தகுப்பம் நியாயவிலைக் கடை அருகில், பொன்னேரி-தேவதானம் கிராம நிா்வாக அலுவலகம், கும்மிடிப்பூண்டி-அயற்கண்டிகை நியாயவிலைக் கடை அருகில், ஆவடி-அன்னம்பேடு நியாயவிலைக் கடை அருகில், ஆா்.கே.பேட்டை-அம்மனேரி நியாயவிலைக் கடை அருகில் நடைபெற உள்ளது.

இந்த சிறப்பு முகாமில் அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று குடும்ப அட்டைகளில் திருத்தம் மேற்கொண்டு பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT