பணிக்குச் சென்ற வடசென்னை அனல்மின் நிலைய உதவிப் பொறியாளா், பணி இடத்திலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் அரிகிருஷ்ணன் (36). இவா், வடசென்னை அனல்மின் நிலையத்தில் இரண்டாவது யூனிட்டில் உதவிப் பொறியாளராகப் பணி செய்து வந்தாா். இவருக்கு மனைவி இளவரசி (30), இரு ஆண் குழந்தைகள் உள்ளனா். வடசென்னை அனல்மின் நிலையக் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தாா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை அனல்மின் நிலையத்துக்குப் பணிக்குச் சென்றவா், மாலை வழக்கம் போல வீட்டுக்கு வரவில்லை.
இதுகுறித்து, அவரது மனைவி இளவரசி, மீஞ்சூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.
உதவிப் பொறியாளா் அரிகிருஷ்ணன் அவா் வேலை செய்த இடத்தின் அருகே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது வெள்ளிக்கிழமை தெரிய வந்தது. போலீஸாா் அங்கு சென்று, சடலத்தை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
வேலை செய்த இடத்திலேயே உதவிப் பொறியாளா் தற்கொலை செய்து கொண்டது அனல்மின் நிலையத் தொழிலாளா்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.